Sunday, August 16, 2020

44. எண்ணப்பதிகம்


 44. எண்ணப்பதிகம்

கோயில் (சிதம்பரம், தில்லையில் அருளிச்செய்யப்பட்டது)

ஒழியா இன்பத்து உவகை; ஆசிரிய விருத்தம்.


திருச்சிற்றம்பலம்


பாருரு வாய பிறப்பறவேண்டும் பத்திமை யும்பெற வேண்டும் சீருரு வாய சிவபெரு மானே செங் கமல மலர்போல் ஆருரு வாயஎன் னார முதேஉன் அடியவர் தொகை நடுவே ஓருருவாய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண் டருளே.  1
உரியேன் அல்லேன் உனக் கடிமை உன்னைப் பிரிந்திங் கொருபொழுதும்
தரியேன் நாயேன் இன்னதென்று அறியேன் சங்கரா கருணையினாற்
பெரியோன் ஒருவன் கண்டுகொள் என்றுன் பெய்கழல் அடிகாட்டிப்
பிரியேன் என்றென் றருளிய அருளும் பொய்யோ எங்கள் பெருமானே.  2 
என்பே உருகநின் அருள்அளித்துன் இணைமலர் அடி காட்டி 
முன்பே என்னை ஆண்டுகொண்ட முனிவா முனிவர் முழுமுதலே
இன்பே அருளி எனையுருக்கி உயிருண் கின்ற எம்மானே 
நண்பே யருளாய் என்னுயிர் நாதா நின்னருள் நாணாமே  3 
பத்தில னேனும் பணிந்தில னேனும்உன் உயர்ந்தபைங் கழல் காணப்
பித்தில னேனும் பிதற்றில னேனும்  பிறப்பறுப்பாய் எம்பெருமானே
முத்தனை யானே மணியனை யானே முதல்வ னேமுறை யோஎன்று
எத்தனை யானும் யான்தொடர்ந் துன்னை இனிப்பிரிந் தாற்றேனே.  4 
காணும தொழிந்தேன் நின்திருப் பாதம் கண்டு கண் களிகூரப்
பேணும தொழிந்தேன் பிதற்றும தொழிந்தேன் பின்னைஎம் பெருமானே
தாணுவே அழிந்தேன் நின்னினைந் துருகுந் தன்மைஎன் புன்மைகளால்
காணும தொழிந்தேன் நீயினி வரி னுங் காணவும் நாணுவனே.  5 
பாற்றிரு நீற்றெம் பரமனைப் பரங்கரு ணையோடும் எதிர்ந்து 
தோற்றிமெய் யடியார்க் கருட்டுறை யளிக்குஞ் சோதியை நீதி யிலேன்
போற்றியென் அமுதே என நினைந் தேத்திப் புகழ்ந்தழைத் தலறியென் னுள்ளே
ஆற்றுவனாக உடையவ னேஎனை ஆவஎன் றருளாயே.  6 

  
திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

51. அச்சோப் பதிகம்

  51. அச்சோப் பதிகம் கோயில் (சிதம்பரம், தில்லையில் அருளிச்செய்யப்பட்டது)  அனுபவவழி அறியாமை; கலிவிருத்தம். திருச்சிற்றம்பலம் முத்திநெறி அறியா...