Sunday, August 16, 2020

45. யாத்திரைப் பத்து

 45. யாத்திரைப் பத்து

கோயில் (சிதம்பரம், தில்லையில் அருளிச்செய்யப்பட்டது)

அனுபவாதீதம் உரைத்தல்;அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.   

திருச்சிற்றம்பலம்


பூவார் சென்னி மன்னனெம் புயங்கப் பெருமான் சிறியோமை ஓவா துள்ளம் கலந்துணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால் ஆவா என்னப் பட்டன்பாய் ஆட்பட் டீர்வந் தொருப்படுமின் போவோங் காலம் வந்ததுகாண் பொய்விட் டுடையான் கழல்புகவே.  1
புகவே வேண்டா புலன்களில்நீர் புயங்கப் 
  பெருமான் பூங்கழல்கள்
மிகவே நினைமின் மிக்கவெல்லாம் வேண்டா 
  போக விடுமின்கள்
நகவே ஞாலத் துள்புகுந்து நாயே 
  அனைய நமையாண்ட
தகவே யுடையான் தனைச்சாரத் தளரா 
  திருப்பார் தாந்தாமே.  2 
தாமே தமக்குச் சுற்றமும் தாமே 
  தமக்கு விதிவகையும்
யாமார் எமதார் பாசமார் என்ன
  மாயம் இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரோடும் அவன்தன் 
  குறிப்பே குறிக்கொண்டு
போமா றமைமின் பொய்நீக்கிப் புயங்கன் 
  ஆள்வான் பொன்னடிக்கே.  3 
அடியார் ஆனீர் எல்லீரும் அகல 
  விடுமின் விளையாட்டைக்
கடிசே ரடியே வந்தடைந்து கடைக்கொண் 
  டிருமின் திருக்குறிப்பைச்
செடிசே ருடலைச் செலநீக்கிச் சிவலோ
  கத்தே நமைவைப்பான்
பொடிசேர் மேனிப் புயங்கன்தன் 
  பூவார் கழற்கே புகவிடுமே.  4 
விடுமின் வெகுளி வேட்கைநோய் மிகவோர் 
  காலம் இனியில்லை
உடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோடு உடன்போ 
  வதற்கே ஒருப் படுமின் 
அடைவோம் நாம்போய்ச் சிவபுரத் துள் அணியார் 
  கதவ தடையாமே
புடைபட்டுருகிப் போற்றுவோம் புயங்கன் 
  ஆள்வான் புகழ்களையே.  5 
புகழ்மின் தொழுமின் பூப்புனைமின் புயங்கன்  
  தாளே புந்திவைத்திட்டு
இகழ்மின் எல்லா அல்லலையும் இனியோர் 
  இடையூ றடையாமே
திகழுஞ் சீரார் சிவபுரத்துச் சென்று 
  சிவன்தாள் வணங்கிநாம்
நிகழும் அடியார் முன்சென்று நெஞ்சம் 
  உருகி நிற்போமே.  6 
நிற்பார் நிற்கநில் லாவுலகில் நில்லோம் 
  இனிநாம் செல்வோமே
பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன் 
  ஆள்வான் பொன்னடிக்கே
நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும்  
  பரிசே ஒருப்படுமின் 
பிற்பால் நின்று பேழ்கணித்தாற் பெறுதற் 
  கரியன் பெருமானே.  7 
பெருமான் பேரானந்தத்துப் பிரியா 
  திருக்கப் பெற்றீர்காள் 
அருமா லுற்றுப் பின்னைநீர் அம்மா 
  அழுங்கி அரற்றாதே
திருமா மணிசேர் திருக்கதவம் திறந்த
  போதே சிவபுரத்துத்   
திருமா லறியாத் திருப்புயங்கன் திருத்தாள் 
  சென்று சேர்வோமே.  8 
சேரக் கருதிச் சிந்தனையைத் திருந்த 
  வைத்துச் சிந்திமின்
போரிற் பொலியும் வேற்கண்ணாள் பங்கன் 
  புயங்கன் அருளமுதம்
ஆரப் பருகி ஆராத ஆர்வங்
  கூர அழுந்துவீர்
போரப் புரிமின் சிவன்கழற்கே பொய்யிற் 
  கிடந்து புரளாதே.  9 
புரள்வார் தொழுவார் புகழ்வாராய் இன்றே 
  வந்தா ளாகாதீர்
மருள்வீர் பின்னை மதிப்பாரார் மதியுட் 
  கலங்கி மயங்குவீர்
தெருள்வீராகில் இதுசெய்ம்மின் சிவலோ 
  கக்கோன் திருப்புயங்கன்
அருளார் பெறுவார் அகலிடத்தே அந்தோ 
  அந்தோ அந்தோவே.  10   

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

51. அச்சோப் பதிகம்

  51. அச்சோப் பதிகம் கோயில் (சிதம்பரம், தில்லையில் அருளிச்செய்யப்பட்டது)  அனுபவவழி அறியாமை; கலிவிருத்தம். திருச்சிற்றம்பலம் முத்திநெறி அறியா...