5. திருச்சதகம்
(திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது)
திருச்சிற்றம்பலம்
5. கைம்மாறு கொடுத்தல்
கலிவிருத்தம்
இருகை யானையை ஒத்திருந் தென்னுளக் கருவை யான்கண்டி லேன்கண்ட தெவ்வமே வருக வென்று பணித்தனை வானுளோர்க் கொருவ னேகிற்றி லேன்கிற்பன் உண்ணவே. 1
உண்டொர் ஒண்பொரு ளென்றுணர் வார்க்கெலாம் பெண்டிர் ஆண்அலி யென்றறி யொண்கிலை தொண்ட னேற்குள்ளவாவந்து தோன்றினாய் கண்டுங் கண்டிலேன் என்னகண் மாயமே. 2
மேலை வானவ ரும்அறி யாததோர் கோல மேயெனை ஆட்கொண்ட கூத்தனே ஞால மேவிசும் பேஇவை வந்துபோம் கால மேஉனை யென்றுகொல் காண்பதே. 3
காண லாம்பர மேகட் கிறந்ததோர் வாணி லாப்பொருளே இங்கொர் பார்ப்பெனப் பாண னேன்படிற் றாக்கையை விட்டுனைப் பூணு மாறறி யேன்புலன் போற்றியே. 4
போற்றி யென்றும் புரண்டும் புகழ்ந்தும்நின் றாற்றன் மிக்கஅன் பாலழைக் கின்றிலேன் ஏற்று வந்தெதிர் தாமரைத் தாளுறுங் கூற்றம் அன்னதொர் கொள்கையென் கொள்கையே. 5
கொள்ளுங் கொல்லெனை அன்பரிற் கூய்ப்பணி கள்ளும் வண்டும்அறாமலர்க் கொன்றையான் நள்ளுங் கீழுளும் மேலுளும் யாவுளும் எள்ளும் எண்ணெயும் போல்நின்ற எந்தையே. 6
எந்தையாய் எம்பிரான் மற்றும் யாவர்க்கும் தந்தை தாய்தம்பிரான் தனக்கஃதிலான் முந்தி என்னுள் புகுந்தனன் யாவருஞ் சிந்தை யாலும் அறிவருஞ் செல்வனே. 7
செல்வம் நல்குர வின்றிவிண் ணோர்புழுப்
புல்வ ரம்பின்றி யார்க்கும் அரும்பொருள்
எல்லை யில்கழல் கண்டும் பிரிந்தனன்
கல்வ கைமனத் தேன்பட்ட கட்டமே. 8
கட்ட றுத்தெனை யாண்டுகண் ணாரநீ றிட்ட அன்பரொ டியாவருங் காணவே பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை எட்டி னோடிரண் டும்அறி யேனையே. 9
அறிவ னேஅமு தேஅடி நாயினேன் அறிவ னாகக்கொண் டோஎனை ஆண்டது அறிவி லாமையன் றேகண்ட தாண்டநாள் அறிவ னோஅல்ல னோஅரு ளீசனே. 10
No comments:
Post a Comment